விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது.
மே 18 ல் முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டப் போரில் உயிரிழந்த ஆயிரமாயிரம் அப்பாவிகளான மக்களை நினைவு கூர்ந்து இவ்வாரப் பத்தியை ஆரம்பிக்கிறேன். இலங்கை அரசியலில் மிக வேகமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன.
தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமானால் அது கிழக்கு மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாக கருதப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாம் இதுவரையில் கிழக்கு மாகாண சபையினை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லையெனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொண்டால் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நிறுத்துவது குறித்து, எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், மனிதாபிமான பேரவலத்திற்கு முடிவில்லை என்று வன்னிப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வார வெளியீடு ஒன்றுக்கு தமது சோகக்கதைகளை விபரித்துள்ளனர்.
இலங்கையின் மலையகப் பிரதேசங்களி;ல் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பதுளை, ராகலை, பண்டாரவளை மற்றும் நுவரெலியவின் பல இடங்களில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
சிறையில் உள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பொதுமன்னிப்பு விடுதலை தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார்.
புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக' அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யில் மூன்று பெண்கள் உட்பட 192பேரும், களுத்துரையில் 22 பேரும் வவுனியாவில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 32பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. யுத்தப் படுகொலைகளை ஏற்றுக்கொள்ளாது மறுத்து வருகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் உள்ளே இராணுவப் புலனாய்வாளர்கள் சுந்திரமாக நடமாடுவதை நிர்வாகம் அறிந்தும் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் காலவரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலைக்ழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பாக்தாத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தை முன் மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த வாரம் 421 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அறிமுகப்படுத்தியது. தற்போது முகநூல் மற்றும் சமூக வளைதளங்கள் வழியாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று.