இலங்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொதுநலவாய நாடுகள் ஆராய்கிறது!– கமலேஸ் சர்மா
இலங்கையின் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமையானது பொதுநலவாய நாடுகளின் அரசியல் அமைப்பையும், கொள்கைளையும் மீறும் செயலாகும். எனவே இலங்கை தொடர்பில் இந்த விடயத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாக அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து கமலேஸ் சர்மா தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
எனினும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது பிரதமநீதியரசரை பதவி நீக்கம் செய்துள்ளது.
எனவே இந்த செயல் இலங்கையின் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் பிரச்சினையை அதிகப்படுத்தியுள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் மதிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கமலேஸ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.