புதிய பிரதம நீதியரசர் நியமனம்! தூக்குமரத்தை தயார்படுத்திக்கொண்டே வழக்குகள் விசாரிக்கப்படும்!
அமெரிக்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தூக்குமரத்தை தயார் படுத்திக்கொண்டே வழக்குகளை விசாரித்தனர். அவ்வாறதொரு நிலைமை இங்கு ஏற்படுவது வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்க வேண்டாம் என இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையினர், அமைப்புக்கள், சட்டத்தரணிகள், ஜனநாயகத்தை நிர்வகிக்கும் நாடுகள், சர்வதேச சட்டநிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும், அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் பிரதம நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரேரணை விவகாரத்தை சட்டம் தொடர்பிலும் போதியளவான கல்வியறிவு இல்லாதவர்களுமே தெரிவுக்குழு என்ற வகையில் கையாண்டனர்.
இவ்வாறான நிலையிலேயே பிரதம நீதியரசரை பதிவியிலிருந்து நீக்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளது. அரசியலமைப்பை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.
சட்டமா அதிபர் திணைக்களம் 'சூனியம்' ஆக்கப்பட்டது போல. நீதித்துறையையும் சூனியமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பல்வேறு கொலைகள் தொடர்பிலான வழக்குகள் கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அவ்வாறான காலப்பகுதியில் சட்டமா அதிபராக பதவிவகித்தவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் தூக்குமரத்தை தயார் படுத்திக்கொண்டே வழக்குகளின் விசாரணைகளை ஆரம்பிக்கப்படும்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவது வெகுதொலைவில் இல்லை என்றார்.