புதிய பிரதம நீதியரசராக இன்று மதியம் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளேன்: மொஹான் பீரிஸ் அறிவிப்பு
இன்றையதினம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே, மொஹான் பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, வழமை போன்றே நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசர் சிராணி பண்டாராநாயக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பொலிஸார் பெரும் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதாக மொஹான் பீரிஸ் அறிவிப்பு
இன்று மதியம் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதாக முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் 12.30 அளவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற பேரவை இன்று முற்பகல் 10.00 மணி அளவில் கூடி ஜனாதிபதியின் பரிந்துரைகள் குறித்து ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றப் பேரவையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் சட்ட மா அதிபர் இலங்கையின் 44ம் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.