செய்தி
(2ம் இணைப்பு)
Photo
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடமைகளுடன் சிராணி வெளியேற்றம்! ஆவணங்கள் பதிவாளரிடம் கையளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 06:38.35 AM GMT ]
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சொந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கொழும்பு றோயல் பார்க்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

2ம் இணைப்பு

சிராணியிடமிருந்து ஆவணங்களை பெற்றுச்சென்றார் உயர்நீதிமன்ற பதிவாளர்

கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் சென்ற உயர்நீதிமன்ற பதிவாளர், அங்கிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றைப் பெற்றுச் சென்றுள்ளார்.

மேற்படி ஆவணங்கள், முன்னாள் பிரதம நீதியரசரினால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ ஆவணங்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013, 02:43.42 PM ]

திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின்   வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Saturday, 25-05-2013 13:58:45 GMT ]
சீனாவில் புயல் மழை காரணமாக 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.