இலங்கையின் தற்போதைய சபாநாயகர் சமால் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் விருப்பமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டி.எம். ஜயரட்ன அரசியலிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதனால், அந்த வெற்றிடத்திற்கு சபாநாயகர் சமால் ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும்.
தாம் யாருக்கும் சார்பாக பேசவில்லை. அடுத்த பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் சமால் ராஜபக்சவே என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதிப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ச மிகவும் பொருத்தமானவர் என தாம் குறிப்பிட்டதாகவும், தமது கருத்து நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது என அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.