எதிர்வரும் 23 ஆம் திகதி லண்டனில் நடைபெறுகின்ற ஏல விற்பனையில் குறித்த சந்திர வட்டக்கல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தகவல்களை திரட்டுமாறு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளர் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அங்கு வைக்கப்பட்டுள்ள சந்திர வட்டக்கல் அநுராதபுர காலத்திற்கு சொந்தமானது. இது 1950ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது எனவும் கலாநிதி செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதனைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்டர்போலின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திர வட்டக்கல் லண்டனுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டிருந்தால் அதனை மீண்டும் இலங்கைக்கு வர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.