செய்தி
தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 09:57.58 AM GMT ]
சட்டவிரோதமாக ஒரு தொகை தங்க பிஸ்கட்களை இலங்கையிலிருந்து கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 600 கிராம் எடையுடைய 5 தங்க பிஸ்கட்டுகளும் 45 லட்ச ரூபாவிற்கு அதிக பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் வெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் தங்க பிஸ்கட்களை பாதணியில் வைத்து மிக சூட்சுமமான முறையில் கொண்டுச் செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பபட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இந்தியாவின் மும்பை நகருக்கு செல்ல தயார் நிலையில் இருந்ததாகவும், இவர்கள் இருவரும் கொழும்பைச் சோ்ந்தவர்கள் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 01:44.51 PM ]

ஜப்பானின் இரண்டு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

[ Tuesday, 21-05-2013, 01:39.24 PM ]
நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக இன்றிரவு பல பாகங்களில் மழைபெய்யக் கூடும் என்று வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது.
[ Tuesday, 21-05-2013, 12:36.19 PM ]
நெடுங்கேணி சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு மேலாகியும் இன்னமும் கைது செய்யப்படாதுள்ளார். இதனை வன்னி மாவட்ட பிரஜைகள் குழுக்களின் இணையம் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
[ Tuesday, 21-05-2013, 12:22.41 PM ]
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? பிரதமர்களும் அரசு அதிகாரிகளும் அழைத்துப் பேச்சு நடத்தும் யாசின் மாலிக் தமிழகத்துக்கு வரக்கூடாதா.. இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.
[ Tuesday, 21-05-2013, 11:57.18 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.