இதற்கமைவாக, நான்கு கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை சீன அரசாங்கம் கையளித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் விளையாட்டு உபகரணங்களை அலரி மாளிகையில் இன்று கையளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய சீன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யுத்தத்தின் பின்னர் பிள்ளைகளின் மனோநிலையை வழமையான நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இங்கு குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு, கலாசாரத் துறைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சீனா விளையாட்டுத்துறை பயிற்சிக்காக எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதியளித்தார்.