செய்தி
காணாமல் போன கணவரின் வழக்கு விசாரணைகளில் நியாயம் கிடைக்குமா?: சந்தியா ஏக்னலிகொட கேள்வி
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:30.25 PM GMT ]
இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போன செய்தியாளர் ஏக்னலிகொட சம்பந்தமான வழக்கு விசாரணைகளில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்தியா ஏக்னலிகொட கருத்து வெளியிட்டார்.

காணாமல்போன தன் கணவர், வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்துவருவதாக 2011ல் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் மொஹான் பீரிஸ் கூறியிருந்ததை சந்தியா சுட்டிக்காட்டினார்.

ஆனால் 2012ம் ஆண்டு ஏக்னலிகொட சம்பந்தமான வழக்கில் நீதிபதி ஒருவர் முன்பு சாட்சியமளிக்கையில், ஏக்னலிகொட இருக்கும் இடம் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று மொஹான் பீரிஸ் கூறியிருந்ததையும் சந்தியா நினைவுகூர்ந்தார்.

இவ்வாறாக தனது கணவன் விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாகியிருக்கும் சூழலில், நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக காணாமல்போனோர் சம்பந்தமாக குரல்கொடுத்துவரும் அமைப்பின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் இந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நியாயம் பெறுவதற்கான கதவும் மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதியாகியுள்ள நிலையில் அடைபட்டுவிடும் என்று தான் கருவதாக மகேந்திரன் கூறினார்.

காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோர் தொடர்பாகவும் நியாயம் கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது என்றும சுந்தரம் மகேந்திரன் குறிப்பிட்டார்.

மொஹான் பீரிஸ் சட்ட மா அதிபராக இருந்த காலகட்டத்தில் இவ்வாறான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று அவர் குற்றம்சாட்டினார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 12:33.43 AM ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.
[ Wednesday, 22-05-2013, 12:15.03 AM ]
மது போதையில் இருந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 12:07.37 AM ]
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீது  தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013, 12:02.37 AM ]
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யாது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த இடமளிக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 08:00.18 PM ]
அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 18:36:02 GMT ]
புதுடெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.