அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறீ ஆகியோர் இணைந்து இக்கட்டத்தினை திறந்து வைத்து செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்தனர்.
யுத்தத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த இந்தத் தபால் நிலையம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் சுமார் ஐநூறு இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் தலைமை அஞ்சல் அலுவலகம் இதுவாகும்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்எழுச்சித்திட்டம் மற்றும் துரித மீட்சித்திட்டம் ஆகியவற்றின் திட்டப்பணிப்பாளர் லியனகே ஆகியோரும் தபால் திணைக்கள உயர் அதிகாரிகளும் தாபால் திணைக்கள ஊழியர்களும் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பெரும்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






