மொரட்டுவ பல்கலைகழக மாணவர்கள் மோதலுடன் தமக்கு தொடர்பு இல்லை: சோசலிச சமத்துவ கட்சி
இந்த தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க வெளியிடும் கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதன்போது, படுகாயமடைந்த மொரட்டுவ பல்கலைகழக பொறியியல் பீட இறுதியாண்டில் கல்விக் கற்கும் ரொஷான் செனவிரட்ண என்ற மாணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, மோதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி
தெரிவித்துள்ளார்