பாப்பரசர் 16வது பெனடிக்ட் அவர்களை ரணில் விக்ரமசிங்க வத்திக்கானில் சந்தித்து ஆசி பெற்றார்!
வத்திக்கான் தேவாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் தற்போது இடம்பெறும் செயற்பாடுகள், அரசியல் முன்னெடுப்புகள் என்பன குறித்தும், அவர் பாப்பரசருக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
தொடர்ந்து பாப்பரசரால் ஓப்பு கொடுக்கப்படவுள்ள விசேட திருப்பலி பூஜையிலும் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளவுள்ளதாக அவரது காரியாலய பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும், இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அசித்த பெரேரா உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
2ம் இணைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரிசுத்த பாப்பரசரை சந்தித்தார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது பாரியாரான மைத்ரி விக்கிரமசிங்க அவர்களுடன் இத்தாலியிலுள்ள வத்திக்கான் நகரில் அதி வணக்கத்திற்குரிய பாப்பரசர் 16ஆவது பெனடிக்ட் அவர்களை இன்று புதன்கிழமைசந்தித்துள்ளனர்.
இந்த வருடத்தில் பரிசுத்த பாப்பரசரை சந்தித்த முதலாவது நபர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க அவர்களை பாப்பரசரை சந்திப்பதற்கான வழிகாட்டல் மற்றும் ஆயத்தத்தை இலங்கைக்கான வத்திக்கான் தூதர் அதி வணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பெட்டரி தந்தை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பினை இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் ஒன்றிணைப்பாளர் கலாநிதி நெவில் ஜோ தந்தை மற்றும் ஐ.தே.கவின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோர் ஆயத்தத்தை செய்திருந்தனர்.