செய்தி
ஊசி மருந்து குப்பியில் கண்ணாடி துகள்கள் குறித்த விசாரணை அறிக்கை! இந்தியாவிற்கு அறிவிக்குமாறு உத்தரவு
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 04:22.32 PM GMT ]
தெஹிவளை - களுபோவில போதனா மருத்துவமனையில் அண்மையில், ஊசி மருந்து குப்பியில் இருந்து கண்ணாடித் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை துரிதமாக இந்திய அரசாங்கத்திற்கு தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்படும் க்ளோக்சிசிலின் என்ற ஊசி மருந்து இருந்தே கண்ணாடித் துண்டு எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் தேசிய மருந்து பகுப்பாய்வு நிறுவனம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகள் பலவற்றில் இருந்து கண்ணாடித் துண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் இதற்கு முன்னரும் பதிவான நிலையில் அவ்வப்போது இலங்கை இது குறித்து இந்தியாவிற்கு தெரியப்படுத்தி வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கண்ணாடித் துண்டு மீட்கப்பட்ட மருந்தை இலங்கையில் தடைசெய்வது என்று இன்றைய தினம் சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 02:38.27 AM ]
13ம் திருத்தச் சட்டம் பலவந்தமான முறையில் இலங்கை மீது திணிக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 02:36.07 AM ]

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்மானம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வடக்கில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

[ Thursday, 20-06-2013, 02:35.18 AM ]
காதலனின் வீட்டுக்குச் செல்ல பொலிஸாரின் உதவியை பாடசாலை மாணவியொருவர் நாடியுள்ளார்.
[ Thursday, 20-06-2013, 02:18.42 AM ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்தும் தமிழ் மக்களுக்கச் சொந்தமான 2ஆயிரத்து 590ஏக்கர் விவசாய நிலம் 1983ம் ஆண்டின் பின்னர் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை விடுவிக்க வலியுறுத்தி நிலத்திற்குச் சொந்தமான தமிழ் மக்கள் வெலிஓயா பிரதேச செயலகத்திடம் மகஜர் கையளித்துள்ளனர்.
[ Thursday, 20-06-2013, 01:46.54 AM ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.