இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியான ஜே.கனகரத்தினம் போட்டியிட தீர்மானம்
இதற்கான வேட்பு மனுக்கள் கோரும் செயற்பாடு இந்த மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி சஞ்சய கமகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாம் இந்த முறையும் சட்டத்தரணிகள் சங்க செயலாளர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்சமயம் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக பதவி வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மீண்டும் ஒரு முறை அந்த பதவிக்காக போட்டியிட போவதில்லை என இதுவரை அறிவிக்கவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சஞ்சய கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்த போதும், இந்த முறை சங்கத்தலைவர் போட்டியில் தாம் களமிறங்கப் போவதில்லை என விஜயதாச ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.