செய்தி
துவாரகேஸ்வரன் மீது அசிற் வீச்சு!- வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணை
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:35.43 PM GMT ]
யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரன் மீது அசிற் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 30ம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்த துவாரகேஸ்வரன் வழி மறிக்கப்பட்டு, அவர் மீது அசிற் வீசப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் தற்போது கொழும்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான துவாரகேஸ்வரன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டில் ஆளுநரின் செயலாளரான முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் மீதே குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே குறித்த முன்னாள் இராணுவ மேஜயரும் தற்போதைய ஆளுநரின் செயலாளருமான குறித்த நபரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த 2நாட்களாக கடுமையான விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

மேலும் நேற்றய தினம் யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியொன்றில் வர்த்தக நிலையமொன்றை நடத்திவரும் துவாரகேஸ்வரனின் மைத்துனரிடம் தம்மை புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தும் தொனியில் நடந்து கொண்டிருக்கின்றனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 11:31.57 AM ]
ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 11:20.17 AM ]
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார்.
[ Saturday, 25-05-2013, 11:11.42 AM ]
இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 10:13.25 AM ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 10:11.50 AM ]
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 10:19:13 GMT ]
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 08:06:26 GMT ]
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங், விசாரணையின் போது தனக்கு வீராட் கோஹ்லி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் நெருக்கமானவர்கள் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 11:30:42 GMT ]
உன்னாலே உன்னாலே பட நாயகன் வினய் படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் பிந்து மாதவி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.