யாழ்.பல்கலைக் கழக மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் - புத்தாண்டுச் செய்தியில் யாழ் றோயல் இளவரசன்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 08:32.48 PM GMT ]
இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சமாதானம் சுபீட்சத்தை சந்தோஷத்தை கொண்டு வரவேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பற்றியும் யாழ் றோயல் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் உயர்திரு றேமியஸ் கனகராஜா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
நாளை சூரிய அஸ்தமனத்தில் பிறக்கப்போகும் புத்தாண்டை நல்லபடியாக வரவேற்கப்போகும் இந்நிலையில் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்து, ஏனைய மாணவர்களையும் சரியாக நல்வழிப்படுத்தவேண்டும்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை தாமதிக்காமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என சட்ட அதிகாரிகளிடம், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் பாதுகாக்கவேண்டியது துணைவேந்தர்களின் கடமை எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
பழைய வரலாற்றைத் திருப்பி உருவாக்காமல், உங்கள் படிப்பில் அக்கறை செலுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடமும், இலங்கைத்தீவில் உள்ள அனைத்து மாணவர்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
சமாதானம் நிலைத்திருக்கும் இலங்கையில் மீண்டும் அச்சமாதானத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு பிரச்சினை எனினும் இருதரப்பினரும் பேசி ஒரு சுமூகநிலைக்கு வரவேண்டும் என தெரிவித்ததோடு, எதையும் உருவாக்குவது எளிதல்ல, ஆனால் அதை அழிப்பது மிக எளிது.
எனவே பிரச்சினை இருக்குமிடத்தில் அவற்றை உடனே பேசித் தீர்வு எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்லோரும் சமமாக வாழ வேண்டும் என இப்புத்தாண்டில் தெரிவித்துக்கொள்வதாக கூறி தன் வாழ்த்தை முடித்துள்ளார்.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு தம் தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.