செய்தி
சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்காமல் யாழ். மாணவர்களை விடுதலை செய்யுங்கள்!
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 12:19.06 AM GMT ]

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

தடுத்து வைத்துள்ள  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் சர்வதேச சமுதாயத்திற்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்த இடமில்லாமல் செய்யமுடியும்.

இந்த மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கவும் இல்லை. அவர்கள் முன்னர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கவும் இல்லை.

எனவே, இவர்களை விடுதலை செய்து பல்கலைக்கழகங்களை இயங்க வழிசெய்ய வேண்டும். என்று அந்த சம்மேளனத்தின் பேச்சாளர் டாக்டர் மஹிந்த மென்டிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலைமையினால் யாழ்ப்பாண மக்களும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் பயப்பீதியில் உள்ளனர்.

இவர்கள் கெடுபிடிகளுக்கு முகம்கொடுத்து கொண்டிருக்கின்றனர். எழுந்தமானமாக கைதுகள் இடம்பெறும் போது அங்கு வழமையான நிலைமை இருக்கமுடியாது.

கடந்த நவம்பரில் மோதல் ஏற்பட்டதிலிருந்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பல்கலைகழக மாணவர்கள் பலரை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இதுவரை 50 பேர் வரையில் யாழ்ப்பாணத்தில் கைதாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 02:41.12 AM ]
அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Monday, 20-05-2013, 02:35.41 AM ]
வடக்கில் 17 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Monday, 20-05-2013, 02:28.24 AM ]
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கான தேவைகள் எவையும் இல்லை என்று மாலைதீவு தெரிவித்துள்ளது.
[ Monday, 20-05-2013, 02:25.24 AM ]
பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
[ Sunday, 19-05-2013, 06:31.49 PM ]
பிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள்.
[ Monday, 20-05-2013 02:50:11 GMT ]
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி.
[ Monday, 20-05-2013 01:45:19 GMT ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 18:28:21 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Sunday, 19-05-2013 06:44:43 GMT ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
[ Monday, 20-05-2013 03:09:32 GMT ]
ஹன்சிகாவை போன்று கொழு கொழுவென வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் ப்ரியா ஆனந்த்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.