கடந்த 2002ம் இறக்காமம் நான்காம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜ.நூர்தீன் என்று அழைக்கப்படும் நபரை குறித்த மூவரும் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்துள்ளனர்.
தமது உறவினர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகவே குறித்த மூவரும், எம்.ஜ.நூர்தீன் என்பவரை கொலை செய்துள்ளனர்.
பழிக்கு பழிவாங்குவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரையும் பொலிசார் கைது செய்தனர்.
அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆரம்ப வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், வழக்கு கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
விசாரணையில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் சாகும்வரை தூக்கிலிடுமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.