உள்ளூராட்சி சபைகளில் நிலவும் வெற்றிடங்களை பழைய முறைப்படி நிரப்ப முடியும்: சட்ட மா அதிபர்
காலி மாநகர சபையின் தலைவர் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை மீள்நிரப்புவது தொடர்பில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோரியிருந்தது.
தற்போது புதிய உள்ளூராட்சி சட்ட மூலம் நடைமுறையில் உள்ள நிலையில், இந்த பதவியை மீள்நிரப்புவதில் நெருக்கடி நிலவுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
திடீர் வெற்றிடங்களை மீள்நிரப்ப புதிய சட்டத்தில் இடமளிக்கப்படாமையே இதற்கான காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர், பழைய முறையின் கீழ் குறித்த மாநகரசபைக்கு புதிய தலைவரை நியமிக்க முடியும் என்று சட்ட மா அதிபர் விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, அடுத்த விருப்பு வாக்கு பட்டியலில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் தலைவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.