செய்தி
இந்திய விஜயத்தை முடித்துவிட்டு ஜனாதிபதி இன்று மாலை தாயகம் திரும்பினார்!
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:17.27 AM GMT ]
இந்தியாவிற்கான ஆன்மீக விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை மீண்டும் தாயகம் திரும்பினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் 70 பேர் கொண்ட குழுவினர் பீகார் - புத்தகயா மற்றும் ஆந்திர மாநில, சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி தலங்களுக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தனர்.

தமிழக அரசியல் தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கடவுள் தரிசனத்தில் ஈடுபட்டு பின் பாதுகாப்பாக அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

ரேணிகுண்டா விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 6.40 மணிக்கு திருமலைக்கு வந்த ஜனாதிபதியை திருப்பதி கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, சித்தூர் ஆணையாளர் சாலமேன், ஆரோக்கியராஜ், பொலிஸ் அதிகாரி ராஜசேகர் பாபு மற்றும் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.

இரவு அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று அதிகாலை 3 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

அங்கு சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு கடவுள் தரிசனம் செய்தார். அதிகாலை 4.15 மணி வரை அவர் கோவிலில் இருந்தார்.

தரிசனம் முடிந்ததும் கோவிலில் உள்ள கொடிகம்பத்தை தொட்டு வணங்கினார். கோவில் ரங்கநாயகர் மண்டபத்தில் ராஜபக்ஷவுக்கு கோவில் அதிகாரிகள் பட்டு வஸ்திரம் அணிவித்தனர். லட்டு பிரசாதங்கள் வழங்கினர். திருப்பதி தேவஸ்தான நாட்காட்டி, மற்றும் நாட்குறிப்புகளையும் வழங்கினர்.

பின்னர் காலை 9.30 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் ரேணிகுண்டா சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

ராஜபக்ஷ வருகையையொட்டி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருப்பதி திருமலை வரை வழி நெடுகிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை ஜி.என்.சி. டோல்கேட், பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் ம.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்கள் ராஜபக்ஷவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அவரை கண்டித்து கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 300 பேரை பொலிஸார் கைது செய்தனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 03:09.08 PM ]
சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது.
[ Monday, 20-05-2013, 02:25.52 PM ]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

[ Monday, 20-05-2013, 01:53.13 PM ]
இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
[ Monday, 20-05-2013, 01:17.26 PM ]

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் றோகன விஜேவீரவின் மூத்த புதல்வி தசுன் ஈஷா விஜேவீர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

[ Monday, 20-05-2013, 12:00.02 PM ]
நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 08:18:32 GMT ]
திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 20-05-2013 11:23:16 GMT ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Monday, 20-05-2013 14:10:57 GMT ]
கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.