மஹிந்த இந்தியாவுக்கு வந்தது சரியா? அவரை வரவேற்கத்தான் வேண்டுமா? - விவாத மேடை
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:18.24 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குள் வந்தது சரியா? இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து பிணமாலை அணிந்துவரும் அவரை நாம் வரவேற்கத்தான் வேண்டுமா? இலங்கைத் தமிழர்களுடைய பூர்வீக அடையாளங்கள் அழித்து துடைத்தொழிக்கப்படுகின்றனவா?
புலம்பெயர்ந்த தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்கள் இவர்களின் நிலை என்ன கதி என்ன? போன்ற ஏராளமான வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றார்.
அவரின் இந்திய வருகைக்கு தமிழகமெங்கும், இந்தியா முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வரத்தான் வேண்டுமா? என்ற மையக் கருத்தோடு இந்திய தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இவ் விவாத மேடையில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடலூர் தொகுதி நாடாளுமற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் முராரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவ் விவாத மேடையில் இடையிடையே மூத்த பத்திரிகையாளரான சோ அவர்களின் கருத்துக்களும் ஒளிபரப்பட்டுள்ளது.
டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.