கச்சத்தீவு அந்தோனியார் ஆலய விழாவிற்கு, எதிர்வரும் 23 ம் திகதி இராமேஸ்வரத்திலிருந்து 150 க்கும் மேற்பட்ட படகுகளில் பக்தர்கள் பயணிக்க உள்ளனர்.
கடவுச்சீட்டு இல்லாமல் பயணிக்கலாம் என்பதால் பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள், மற்றும் இலங்கைக்குள் அகதிகளும் செல்ல முயற்சிக்கலாம் என்பதால், இந்த ஏற்பாட்டை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
எனவே கியூ, உளவு பிரிவுகள், மற்றும் சுங்க அதிகாரிகள், இந்திய கடற்படையினர், பக்தர்களை தீவிரமாக கண்காணித்து அனுப்ப வேண்டும், என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் அகதிகள் மற்றும் குற்றவழக்கில் தொடர்புள்ள 28 பேர், கச்சத்தீவு செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டனர்.
அத்துடன். இலங்கையிலிருந்து ஒரு பெண் குழந்தையுடன், பக்தர்களுடன் கலந்து இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார்.
இது போல் வேறு யாரும் ஊடுருவாமல் இருக்க கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளாதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
விழாவிற்கு செல்லும் பக்தர்கள் எந்த படகில் செல்கிறார்களோ அதே படகில் தான் திரும்பி வரவேண்டும் என்ற நடைமுறையை செயற்படுத்தவுள்ளனர்.
கச்சத்தீவிலிருந்து புதியவர்கள் யாரையும் ஏற்றி வரக்கூடாது எனவும் படகு செலுத்துனர்களுக்கு இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.