ஐநா முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞனை மாவை சேனாதிராஜா தலைமையிலான ததேகூ குழு சந்திப்பு
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 01:36.47 AM GMT ]
ஜெனிவா, ஐநா முன்றலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழு சந்தித்துள்ளது.
ஜெனிவா அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வில் இலங்கையிலிருந்து வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உக்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன், ஆகியோர் இலங்கையின் இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டனர்.
இச் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் தமிழ் இன உணர்வாளன் திரு கஜன் அவர்களுடன் கருத்துப் பரிமாறலிலும் ஈடுபட்டனர்.
அவ் உணர்வாளன், யார் தமிழன் ஆண்டாலும் எம் உயிரை தியாகம் செய்ய நாம் தயார் என இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞனிடம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மண்ணில் இருந்து நாம் மக்களுடன் உள்ளோம். உங்கள் பலம் என்றும் எமக்கு தேவை. சர்வதேசம் எம்மைச் சூழ்ந்துள்ளது.
இன்று சில செய்திகள் திரிபுபட்டு வருவதனால் தான் எம்மிடம் சில வேறுபாடு. இதனால் யாரும் குழம்பவும் இல்லை எம்மிடம் குழப்பமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
கடந்த 18ம் நாள் காலி முகத்திடலில் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும்.
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.